சிரியா அதிபரின் மாளிகை சூறை: ரஷ்யாவுக்கு தப்பித்தது எப்படி?


மாஸ்கோ: சிரி​யா​வில் இருந்து ரஷ்யா​வுக்கு அதிபர் ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளி​யாகி உள்ளன.

சிரி​யா​வில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்​துக்​கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்​சிக் குழுக்​களுக்​கும் இடையே கடந்த 13 ஆண்டு​களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்​டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்​தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்​சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன. சிரியா அதிபர் ஆ-சாத்​துக்கு ரஷ்யா​வும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்த சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த 8-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்​பற்றின. அதிபர் ஆசாத் ரஷ்யா​வுக்கு தப்பியோடி விட்​டார்.

இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் கூறிய​தாவது: கடந்த நவம்பர் இறுதி​யில் அதிபர் ஆசாத்​துக்கு எதிராக மிகப்​பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்​சிக் குழு தொடங்​கியது. ஆசாத் படையில் இருந்த பல்வேறு ராணுவ தளபதிகள் கிளர்ச்​சிக் குழு​வுடன் ரகசி​யமாக கைகோத்​தனர். இதன்​ காரணமாக அலெப்போ உள்ளிட்ட நகரங்​களில் கிளர்ச்​சிக் குழு வீரர்​களுடன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட​வில்லை. தீவிர போரை தொடங்கிய 13 நாட்​களில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்​சிக் குழுக்கள் சுற்றிவளைத்தன. அங்கும் அதிபர் ஆசாத் படை வீரர்கள் போரில் ஈடுபட​வில்லை.

இதனிடையே துருக்கி, ரஷ்யா, ஈரான் நாடு​களின் மூத்த அதிகாரி​கள், கத்தார் தலைநகர் தோஹா​வில் கடந்த 7-ம் தேதி முக்கிய பேச்சு​வார்த்தை நடத்​தினர். கிளர்ச்​சிக் குழுக்கள் சார்​பில் துருக்கி அதிகாரி​களும் அதிபர் ஆசாத் சார்​பில் ரஷ்யா, ஈரான் அதிகாரி​களும் பேச்சு​வார்த்தை நடத்​தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்டப்​பட்​டது. அதிபர் பதவியை ராஜினாமா செய்​து​விட்டு ஆசாத் பத்திரமாக வெளியேற கிளர்ச்​சிக் குழுக்கள் ஒப்புக் கொண்டன. இதேபோல சிரி​யா​வின் லடாகி​யா​வில் உள்ள ரஷ்ய கடற்​படைத் தளம், சிரி​யா​வின் கிமெய்​மிம் பகுதி​யில் உள்ள ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்​குதல் நடத்த மாட்​டோம் என்று கிளர்ச்​சிக் குழுக்கள் உறுதி அளித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி நள்ளிர​வில் சிரியா அதிபர் ஆசாத் டமாஸ்​கஸில் உள்ள தனது மாளி​கை​யில் இருந்து லடாகி​யா​வில் உள்ள ரஷ்ய கடற்​படைத் தளத்​துக்கு ரகசி​யமாக சென்​றார். அங்கிருந்து கடந்த 8-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோவை சென்​றடைந்​தார். கடந்த ஒரு வாரத்​துக்கு முன்​பாகவே அதிபர் ஆசாத்​தின் மனைவி அஸ்மா மற்றும் 2 மகன்​கள், ஒரு மகள் ஆகியோர் ரஷ்யா​வில் தஞ்சமடைந்து விட்​டனர். தற்போது அதிபர் ஆசாத்​தும் அவரது குடும்பத்​தினரும் பாது​காப்பான இடத்​தில் தங்க வைக்​கப்​பட்டு உள்ளனர். இவ்வாறு ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரி​வித்தன.

ஆஸ்திரி​யா​வில் உள்ள ரஷ்ய தூதர் உலினோவ் கூறும்​போது, “சிரியா அதிபர் ஆசாத்​துக்கு மனிதாபிமான அடிப்​படை​யில் ரஷ்யா அடைக்​கலம் அளித்​துள்ளது. எங்களது நண்பர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்​டோம்” என்று தெரி​வித்​தார். ரஷ்ய வெளி​யுறவுத் துறை செய்தித் தொடர்​பாளர் மரியா கூறும்​போது, “விமான விபத்​தில் அதிபர் ஆசாத் உயிரிழந்​து​விட்​டதாக மேற்​கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்​பின. இதற்காக மேற்​கத்திய ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்​டும்” என்றார்.

அதிபரின் மாளிகை சூறை: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் ஆசாத்தின் மாளிகைக்குள் கிளர்ச்சிக் குழு வீரர்கள், போராட்டக்காரர்கள் கடந்த 8-ம் தேதி நுழைந்தனர். அந்த மாளிகையில் 40 சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை கிளர்ச்சிக் குழுவினர் ஓட்டிச் சென்றனர். அதிபர் மாளிகையில் இருந்த சோஃபா, சேர்கள், கட்டில்கள், ஆடம்பர பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

x