3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி: குகையில் பாம்பு போல் சீறும் வீடியோ வைரல்


ஜார்க்கண்ட்: மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி, குகையில் பாம்பு போல ஊர்ந்து நாக்கை நீட்டியபடி சீறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் சுற்றுலாப் பயணம் வந்திருந்தனர். அவர்கள் ரனிதி குப்தா குகைக்குச் சென்றனர்.

அங்கு ஒரு சிறுமி பாம்பு போல ஊர்ந்து நாக்கை வெளியே நீட்டியபடி சீறிக் கொண்டிருந்தார். அந்தச் சிறுமியின் நடத்தையை பார்த்த வெளிமாநில பக்தர்கள், அவருக்கு சூடம், பத்தி காட்டி வழிபட்டுச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் பக்தர்கள் அந்த மலைக்குச் சென்று பார்த்த போது, மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி தான் அவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரது பெற்றோருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த அவரது பெற்றோர், சிறுமிக்கு பூஜை செய்து பாடல்களைப் பாடி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் கடந்த மூன்று மாதங்களாக எங்கு இருந்தார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

x