லண்டன் கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்த நரி; பதறிய வீரர்கள்: வைரலாகும் வீடியோ


லண்டன்: கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த போது, ​​திடீரென மைதானத்திற்குள் நரி நுழைந்த சம்பவம் வீரர்கள், பார்வையாளர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கிரிக்கெட் மைதானங்களுக்குள் திடீரென நாய்கள் புகுந்து ஆட்டம் காட்டுவதை பலமுறை பார்த்திருக்கிறோம். அது மட்டுமின்றி பாம்பு, பூனை போன்றவை கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைவதும் சகஜம் தான். இவை மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை இடையூறு செய்வதை பலமுறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த முறை காட்டில் வசிக்கும் அரிதான பழுப்பு நிற நரி ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

லண்டனில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த போது, ​​திடீரென மைதானத்திற்குள் நரி நுழைந்தது. பார்வையாளர்கள் மற்றும் வீரர்களின் சலசலப்பால் பயந்து போன நரி சிறிது நேரம் மைதானத்தை சுற்றி ஓடி கடைசியில் மைதானத்தை விட்டு தாவிக் குதித்து தப்பியோடியது. இதைப் பார்த்து வீரர்கள் நரி, நரி என சத்தம் போட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டியின் போது ராட்சத பல்லி ஒன்று எல்லைக் கோட்டைத் தாண்டி களம் புகுந்தது. இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாக்கை நீட்டியவாறு அந்த ராட்சத பல்லி மைதானத்தில் ஓடிய வீடியோவும் வைரலானது.

x