காதலியுடன் சிக்கிய கணவருக்கு தர்ம அடி கொடுத்த மனைவி!


தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பாலகொண்டாவைச் சேர்ந்தவர் விவேக். இவர் புச்சய்யா பேட்டையைச் சேர்ந்த ஹரிதா என்ற பெண்ணை காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், ஸ்பாவிற்குச் சென்ற விவேக்கிற்கு அங்கு பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பழக்கம் நட்பாக மாறியது. இதன் பின் அந்த பெண்ணுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கிய விவேக், சிதம்மதாராவில் அந்த பெண்ணுடன் தங்க ஆரம்பித்தார். இதனால் அவர் வீட்டுக்கு வருவது குறைந்தது.

இதுகுறித்து அவரது மனைவி ஹரிதா கேட்டதால் பிரச்சினை தொடங்கியது. கட்டிய மனைவி இருக்கும் போதே ஒரு பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருப்பதை அறிந்த ஹரிதா, கடந்த 2021-ம் ஆண்டு கணவர் மீது வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், விவேக்கையும், அந்த பெண்ணையும் கையும் களவுமாக பிடிக்க ஹரிதா முடிவு செய்தார்.

இதன்படி தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் விவேக் தங்கியிருந்த வீட்டிற்கு ஹரிதா நேற்று சென்றார். அங்கு படுக்கையில் அந்த பெண்ணுடன் விவேக் இருப்பதைக் கண்ட ஹரிதா கொதித்து போனார். இதனால் கணவனையும், அந்த பெண்ணையும் அடித்து உதைக்க ஆரம்பித்தார். அவருடன் சென்ற ஹரிதாவின் உறவினர்களும் விவேக் மற்றும அவரது காதலி மீது தாக்குதல் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவேக்கையும், அந்த பெண்ணையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தனக்கு நீதி வழங்குமாறு போலீஸாரிடம் ஹரிதா கேட்டுக் கொண்டார். கணவனையும், அவரது காதலியையும் கையும், களவுமாக அவரது மனைவியே பிடித்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x