கோவை: பொள்ளாச்சி அருகே டிராக்டரின் இயந்திர கலப்பையில் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அடுத்த மண்ணூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (45) கூலி தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்த சபரீஸ் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டர் ஓட்டி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சபரீஸ், அப்பகுதியில் உள்ள சுந்தர மூர்த்தி என்பவரது தோட்டத்தில் உழவுப் பணிக்காக டிராக்டர் ஓட்டியுள்ளார். அப்போது டிராக்டரில் செல்வகுமாரின் மகன் ஹரீஷ் (12) அமர்ந்திருந்தார்.
இயந்திர சுழற்கலப்பை பொருத்தப்பட்டு டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரில் அமர்ந்திருந்த ஹரீஸ் கீழே தவறி விழுந்துள்ளார். இதில் இயந்திர கலப்பையில் சிக்கி பலத்த காயமடைந்த ஹரீஸை அங்கிருந்தவர்கள மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகி்ச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரீஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனர்.