தருமபுரி / சேலம்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 9-ம் தேதி விநாடிக்கு 2,000 கனஅடியாகவும், 10-ம் தேதி 1,200 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று மேலும் குறைந்து விநாடிக்கு 1,000 கனஅடியாக பதிவானது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 922 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 436 கனஅடியாக குறைந்தது. காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 107.73 அடியாகவும், நீர்இருப்பு 75.22 டிஎம்சியாகவும் இருந்தது.