சென்னை: இந்தியா-இலங்கை இடையேயான ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை ராணுவ கூட்டு நடவடிக்கைக்கு இந்தியா ஒத்துழைப்பும் உதவியையும் வழங்கும். இது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு கொடும் துரோகம் ஆகும். இவ்வாறு கூறியுள்ளார்.