சென்னை: செயின் பறிப்பு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்த காவல்துறைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை சிறிது நேரத்தில் கைது செய்து என்கவுன்ட்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். காவல் ஆணையர் ஏ.அருண், உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்துவித சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மிகச் சிறந்த முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.