ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் உயிரிழப்பு தடை சட்டத்தை புதிதாக இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: பு​தி​தாக ஆன்​லைன் சூதாட்ட தடைச் சட்​டத்தை இயற்றி தமிழக அரசு நிறைவேற்ற வேண்​டும் என பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலியுறுத்தியுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் தனது சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் செந்​துறை குரும்​பம்​பட்​டியை சேர்ந்த மகேந்​திரன் என்ற பால் வியா​பாரி, ஆன்​லைன் சூதாட்​டத்​தில் லட்​சக்​கணக்​கில் பணத்தை இழந்​த​தால் ஏற்​பட்ட கடன் மற்​றும் மன உளைச்​சல் காரண​மாக தற்​கொலை செய்து கொண்​டிருக்​கிறார். அவருடன் சேர்த்து ஆன்​லைன் சூதாட்​டத்​தில் பணத்தை இழந்து தற்​கொலை செய்து கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை 86-ஆக அதி​கரித்​திருக்​கிறது.

திமுக அரசு இயற்​றிய ஆன்​லைன் சூதாட்ட தடைச் சட்​டம் செல்​லாது என்று சென்னை உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்த பிறகு மட்​டும் கடந்த ஒன்​றரை ஆண்​டு​களில் 26 பேர் தற்​கொலை செய்​துள்​ளனர். இருப்​பினும் மேல்​முறை​யீட்டு வழக்​கு​களை, உச்ச நீதி​மன்​றத்​தில் முறை​யிட்டு விரை​வாக விசா​ரணைக்கு கொண்டு வரு​வதற்கு தமிழக அரசை தடுப்​பது எது என்​பது தெரிய​வில்​லை.

ஆன்​லைன் சூதாட்​டத்​தில் பணத்தை இழந்து தற்​கொலை செய்து கொண்​ட​வர்​களின் எண்​ணிக்​கையை குறைத்​துக் காட்​டு​வ​தில் மட்​டும் ஆர்​வம் காட்​டும் தமிழக அரசு, தற்​கொலைகளை தடுப்​ப​தற்​காக ஆன்​லைன் சூதாட்​டத்​துக்கு தடை பெற ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வில்​லை. உடனடி​யாக சூதாட்​டத்​துக்கு தடை பெறு​வது சாத்​தி​யமில்லை என்​றால் புதிய சட்​டத்தை சட்​டப்​பேர​வை​யில் உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு ராம​தாஸ்​ கூறி​யுள்​ளார்​.

x