திருவள்ளூரில் ஆன்லைன் நிறுவன கிடங்குகளில் சோதனை: ரூ.36 லட்சம் மதிப்பு தரச் சான்றளிக்கப்படாத பொருட்கள் பறிமுதல்


திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள அமே​சான், ஃபிளிப்​கார்ட் கிடங்​கு​களில் பிஐஎஸ் சட்​டம் 2016 மீறப்​படு​வ​தாக இந்​திய தர நிர்ணய அமைவனத்​துக்கு (பிஐஎஸ்) சமீபத்​தில் புகார் வந்​தது. அதன் அடிப்​படை​யில், இந்​திய தர நிர்ணய அமைவனத்​தின் சென்னை கிளை அலு​வலக அதி​காரி​கள் இரு குழுக்​களாக நேற்று முன் தினம் திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள அமே​சான் செல்​லர் சர்​வீஸ் மற்​றும் ஃபிளிப்​கார்ட் கிடங்​கு​களில் அதிரடி சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

பொன்​னேரி அருகே துரை நல்​லூர் கிராமத்​தில் உள்ள அமே​சான் செல்​லர் சர்​வீஸ் கிடங்​கில் பிஐஎஸ் சென்னை கிளை இணை இயக்​குநர்​கள் கவுத்​தம் பி.ஜே, தினேஷ் ராஜகோ​பாலன் உள்​ளிட்ட அதி​காரி​கள் மேற்​கொண்ட சோதனை​யில்​, அங்கு தரச் சான்​றளிக்​கப்​ப​டாத, பல தரக் கட்​டுப்​பாட்டு உத்​தர​வு​களை மீறிய காப்​பிடப்​பட்ட குடு​வை​கள் மற்​றும் உணவு கொள்​கலன்​கள், உலோக குடிநீர் பாட்​டில்​கள், சீலிங் ஃபேன்​கள், பொம்​மை​கள் இருந்​தது தெரிய வந்​தது. இதையடுத்​து, பிஐஎஸ் தர முத்​திரை இல்​லாத, ரூ.36 லட்​சம் மதிப்​புள்ள, காப்​பிடப்​பட்ட குடு​வை​கள் உள்​ளிட்ட 3,376 பொருட்​களை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

செங்​குன்​றம் அருகே கொடு​வள்​ளி​யில் உள்ள ஃபிளிப்​கார்ட் கிடங்​கில் பிஐஎஸ் இயக்​குநர் ஜித் மோகன் மற்​றும் ஜீவானந்​தம் உள்​ளிட்ட அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். அங்​கு, 286 குழந்​தைகளுக்​கான டயப்​பர் பாக்​கெட்​டு​கள், 26 எஃகு வாட்​டர் பாட்​டில்​கள், 10 காப்​பிடப்​பட்ட ஸ்டீல் பாட்​டில்​கள் உள்​ளிட்ட பொருட்​கள் பிஐஎஸ் தரநிலை முத்​திரை (ஐஎஸ்ஐ) இல்​லாமல் இருந்​தன. இதையடுத்து அவற்றை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

x