தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம்


சென்னை: தமிழக காவல் துறை​யில் 3 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வட சென்னை காவல் கூடு​தல் ஆணை​ய​ராக இருந்த நரேந்​திரன் நாயர், டிஜிபி அலு​வல​கத்​தில் உள்ள பணி​யமைப்பு பிரிவு ஐஜி​யாக மாற்​றப்​பட்​டுள்​ளார். அங்கு ஐஜி​யாக பணி​யாற்​றிய எஸ்​.லட்​சுமி, சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு ஐஜி​யாக இருந்த பிர​வேஷ்குமார், வட சென்னை காவல் கூடு​தல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவ்​வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x