விழுப்புரம்: நகைக் கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதி முறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது,"வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன ? முப்போகம் விளையும் நிலமாக இருந்தா லும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக்க முடியும்.
மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசே விளை நிலங்களை கையகப்படுத்து கிறது. விளை நிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியிறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளே ன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போயியுள்ளது.கேரளா போல தமிழகத்தில் இச்சட்டப்பேரவை கூட்டத்தில் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப் பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத் தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றதை புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடைபெறும் கொடுரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடுரக்கொலை நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே காரணமாகும். இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
தற்காலிக ஊழியர்களின் பணி நிலைப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களை பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்படும் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.
நகைக் கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. தற்போது வட்டியை மட்டும் புதுபித்து கொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப் படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்.
புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்கு உறியது. வரவேற்க தக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய ப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு வரவேற்கதக்கது.
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை. பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறினார்.