எண்ணெய் கசிவு விவகாரம்: சிபிசிஎல் நிறுவனத்திடம் ரூ.73 கோடி அபராதம் வசூலிக்க இடைக்கால தடை


சென்னை: கடந்த 2023 டிசம்​பரில் சென்​னை​ மணலி பகு​தி​யில் இருந்து சிபிசிஎல் நிறு​வனம் அருகே பக்​கிங்​ஹாம் கால்​வாய் வழி​யாக திடீரென எண்​ணெய் படலம் பரவி, கடலில் கலந்தது. தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்​வந்து இதை வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரத்​தில் சிபிசிஎல் நிறு​வனத்துக்கு மாசு கட்​டுப்​பாடு வாரி​யம் ரூ.73 கோடி அபராதம் விதித்​தது. இதை எதிர்த்து பசுமை தீர்ப்​பா​யத்​தில் சிபிசிஎல் நிறு​வனம் மனு தாக்​கல் செய்​தது. அமர்​வின் நீதித் துறை உறுப்​பினர் நீதிபதி புஷ்பா சத்​தி​ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் கே.சத்​யகோ​பால் முன்பு வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

‘எண்​ணெய் கசிவு குறித்து ஐஐடி இன்​னும் அறிக்கை தாக்​கல் செய்​யாத நிலை​யில் அபர​ாதம் செலுத்த உத்​தர​விட்​டது நியாயமற்​றது’ என சிபிசிஎல் தரப்​பில் வாதிடப்​பட்​டது. இதையடுத்​து, மாசு கட்​டுப்​பாடு வாரி​யம் அபராதம் வசூலிக்க தீர்ப்​பா​யம் இடைக்​கால தடை விதித்​தது.

x