வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதி: ஜவாஹிருல்லாவுக்கு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்


சென்னை: வெளி​நாடு​களில் இருந்து சட்​ட​விரோத​மாக ரூ.1.55 கோடி நிதி பெற்​ற​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் மனிதநேய மக்​கள் கட்​சி​யின் தலை​வரான எம்​எல்ஏ ஜவாஹிருல்லா உள்​ளிட்​டோருக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்​டனையை உறுதி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. கடந்த 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை வெளி​நாடு​களில் இருந்து சட்​ட​விரோத​மாக ரூ1.55 கோடி நிதி பெற்​ற​தாக மனிதநேய மக்​கள் கட்​சி​யின் தலை​வரும், எம்​எல்​ஏ-வு​மான ஜவாஹிருல்லா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த சென்னை எழும்​பூர் கூடு​தல் குற்​ற​வியல் நீதி​மன்​றம், ஜவாஹிருல்​லா​வுக்கு ஓராண்டு சிறை தண்​டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்​பளித்​தது. மேலும், இந்த வழக்​கில் அவருக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக ஹைதர் அலி் என்​பவருக்கு ஓராண்டு சிறை தண்​டனை​யும், சையது நிசார் அகமது, ஷேக், நல்ல முகமது களஞ்​சி​யம் ஆகியோ​ருக்கு தலா 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

சிறை தண்​டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்​ளிட்ட அனை​வரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த வழக்கை விசா​ரித்த சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம், அவர்​களுக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்​டனையை 2017-ம் ஆண்டு உறுதி செய்​தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்​முரு​கன், வெளி​நாடு​களில் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி வசூலில் ஈடு​பட்​ட​தாக எம்​எல்ஏ ஜவாஹிருல்லா உள்​ளிட்​டோருக்கு கீழமை நீதி​மன்​றம் விதித்த சிறை தண்​டனையை உறுதி செய்து உத்​தர​விட்​டுள்​ளார். இந்த தண்​டனையை எதிர்த்து மனு​தா​ரர்​கள் தரப்​பில் மேல்​ முறை​யீடு செய்​வதற்​​காக ஒரு ​மாத ​காலத்​துக்​கு தண்​டனையை நிறுத்​தி வைத்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

x