தாம்பரம் - திருச்சி இடையே கோடை சிறப்பு ரயில்: பண்ருட்டி, சிதம்பரம், குடந்தை, தஞ்சை வழியே செல்லும்!


சென்னை: கோடைகாலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நடப்பாண்டின் கோடைகாலத்தில், சொந்த ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக, சிறப்பு ரயில் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்விவரம் வருமாறு: திருச்சியில் இருந்து ஏப்.4-ம் தேதி முதல் ஏப்.27-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் (06190) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து ஏப்.4-ம் தேதி முதல் ஏப்.27-ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06191) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும்.

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை அடையும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x