திருவண்ணாமலை அதிர்ச்சி: மண் கடத்தலை தடுத்த சமூக ஆர்வலர் மீது கொடூர தாக்குதல்


திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகநாதன். இவர், அதே கிராமத்தில் வசிக்கும் திமுக பிரமுகர் பச்சையப்பன் என்பவர் கடந்த வாரம் ஏரியில் இருந்து செங்கல் சூளைக்கு மண் கடத்த முயன்றதாக கூறி தடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜெகநாதனை, பச்சையப்பன் நேற்று முன் தினம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜெகநாதன் படுகாயமடைந்தார். அவர், கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x