‘துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்’ - யாரை குறிவைத்து பேசினார் செங்கோட்டையன்!


ஈரோடு: கோபியில் நடந்த அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் செங்கோட்டையன் பேசுகையில், “துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்” என்று பேசியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அந்தியூரை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி ஒருவர் தங்களுக்கு அதிமுக கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை என புகார் தெரிவித்தார்.

அப்போது புகார் கூறிய பிரவீன் என்பவரை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார். அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவர் மீது

இதனை தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "தற்போது பிரச்சினை செய்தவர் அதிமுக நிர்வாகியே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அந்தியூரைச் சேர்ந்த இ.எம்.ராஜாதான். அவரது ஏற்பாட்டில்தான் இந்த நபர் இங்கு வந்து பிரச்சனை செய்துள்ளார். கடந்த தேர்தலின்போது, அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பேசியவர் இ.எம்.ராஜா. அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட துரோகத்தை செய்துவிட்டு இப்போது குழப்பத்தை ஏற்படுத்த ஆட்களை அனுப்பியுள்ளார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்" என்று கூறினார்.

x