மார்ச் 7-ல் இப்தார் விருந்து: தவெக தலைவர் விஜய் பங்கேற்பு


சென்னை: சென்னை ராயப்​பேட்​டை​யில் மார்ச் 7-ம் தேதி நடை​பெறும் இப்​தார் நோன்பு திறக்​கும் நிகழ்ச்​சி​யில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்​கிறார்.

இதுகுறித்து கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈகை பண்​பு, நல்​லிணக்​ கத்தை போற்​றும் புனித ரமலான் நோன்​பு, முஸ்​லிம் பெரு​மக்​களால் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இப்​தார் நோன்பு திறக்​கும் நிகழ்ச்சி வரும் 7-ம் தேதி மாலை சென்னை ராயப்​பேட்டை ஒய்​எம்​சிஏ அரங்​கில் நடை​பெற உள்​ளது.

மாலை 6.24 மணிக்கு நோன்பு திறப்​பு, 6.28 மணிக்கு மக்​ரிப் பாங்​கு, 6.35 மணிக்கு மக்​ரிப் தொழுகை நடை​பெற உள்​ளது. மக்​ரிப் தொழுகை முடிந்​ததும், தவெக சார்​பில் இப்​தார் விருந்து நடை​பெறுகிறது. இதில் தவெக தலை​வர் விஜய், முஸ்​லிம் பெரு​மக்​களோடு கலந்​து​கொண்டு சிறப்​பிக்க உள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

x