பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: தமிழகத்​தில் பெண்​களும், குழந்தை​களும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை: தமிழகத்​தில் போக்சோ எனப்​படும் பாலியல் குற்​றங்​களில் இருந்து குழந்தைகளை பாது​காப்​ப​தற்கான சட்டத்​தின்படி 2024-ம் ஆண்டில் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​களின் எண்ணிக்கை 6,975 ஆக அதிகரித்​திருக்​கிறது. 2023-ம் ஆண்டு 4,581 ஆக இருந்​தது. தற்போது 52.30 சதவீதம் அதிகரித்​துள்ளது.

இத்தகைய குற்​றங்​களைச் செய்​தால் தண்டிக்​கப்​படுவது உறுதி என்ற நிலையை ஏற்படுத்த வேண்​டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறி​விட்​டது. பெண்​களும், குழந்தை​களும் வாழத்​தகு​தி​யற்ற மாநிலம் என்ற நிலை ஏற்படக் கூடாது. குற்​றச்​செயல்​களில் ஈடுபட்​ட​வர்​களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தருவதன் மூலமாக​வும், குற்​றங்களை தடுப்​பதன் மூலமாக​வும் தமிழகத்​தில் பெண்​களும், குழந்தை​களும் அச்​சமின்றி நட​மாடும் சூழலை தமிழக அரசு ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

x