பாஜகவில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்


சென்னை: தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலா​ளராக இருந்த ரஞ்சனா நாச்​சி​யார் கட்சி​யில் இருந்து விலகி​யுள்​ளார். நடிகை, வழக்​கறிஞர், அரசி​யல்​வாதி என்ற பல்வேறு தளங்​களில் இயங்கி வருபவர் ரஞ்சனா நாச்​சி​யார். சில மாதத்துக்கு முன்னர், மாநகரப் பேருந்​தில் தொங்கிய மாணவர்களை அடித்து இறக்கிய அவரது காணொலி பரவலாகப் பேசப்​பட்​டது.

இந்நிலை​யில், அவர் வகித்து வந்த தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர் உட்பட கட்சி​யின் அடிப்படை உறுப்​பினர் பொறுப்​பில் இருந்து விலகு​வதாக அறிவித்​துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​:தாயகத்​துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்​தான் தேசிய இயக்​கத்​தில் இணைந்​தேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்ற மாற்​றாந்​தாய் மனப்​போக்கு என்னை இன்னமும் பாஜக​வில் இருக்க வேண்​டுமா? என கேள்​வியெழுப்​பியது.

என்னைப் பொருத்​தவரை மும்​மொழிக் கொள்கை திணிப்பு, திரா​விடத்​தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்​கணிக்​கப்​படும் தமிழகம் என்ப​தெல்​லாம் தமிழச்​சியாக என்னால் ஏற்றுக்​கொண்டு இயங்க முடிய​வில்லை. என்னை சிறப்பாக இயக்க பாஜக தவறி​விட்​டது. பெண்​களுக்கு முன்னேற்றம் தரும் தலைமை என்ற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்​டேன். இவ்வாறு அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

மேலும், அவர் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பொறுப்​பில் இருந்து விலகியதற்கான சில காரணங்​களைச் சொல்ல முடி​யும், சிலவற்றை சொல்ல முடியாது. நிதி கொடுக்க மாட்​டோம் என்னும் போக்கை ஆணவமாக​வும், அதிகாரத்தை தவறாகப் பயன்​படுத்து​வ​தாக​வுமே பார்க்​கிறேன். வில​கு​வதற்கான எவ்வித அழுத்​த​மும் இல்லை. ​விரை​வில் அடுத்த பயணம் குறித்து அறி​விப்​பேன்’’ என்​றார்​.

x