மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் ரூ.195 கோடிக்கு விற்பனை


சென்னை: சுய உதவிக் குழுக்கள் தயாரிக்​கும் பொருட்கள் அனைத்​துத் தரப்​பினரை​யும் சென்​றடை​யும் வகையில் மண்டல அளவிலான சாராஸ் கண்காட்​சிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்​பனைக் கண்காட்​சிகள், கல்லூரிச் சந்தைகள் போன்றவை தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் அவ்வப்​போது நடத்​தப்​பட்டு வருகின்றன.

அதேபோல் இணைய வழி விற்​பனை​யில் மகளிர் சுய உதவிக் குழுக்​களின் உற்பத்​திப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, அமேசான், ஃபிலிப்​கார்ட், மீசோ, இந்தியா மார்ட், ஜியோ மார்ட் போன்ற முன்னணி இ-வர்த்தக தளங்​களி​லும் மொத்தம் 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்​யப்​பட்டு, தமிழகம் முழு​வதும் விற்கப்​பட்டு வருகின்றன.

அந்த வகையில் மதி அனுபவ அங்காடி, சிறு​தானிய உணவகங்​கள், இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ.194.57 கோடி மதிப்​பிலான சுய உதவிக் குழுக்​களின் உற்பத்​திப் பொருட்கள் விற்கப்​பட்​டுள்ளதாக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் தெரி​வித்​துள்ளது.

x