மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஓய்வூதிய திட்ட மாற்றங்களை ஆய்வு செய்கிறோம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்


சென்னை: ​மாநில அரசுகளின் நிதி நிலை​யில் பெரும் தாக்​கத்தை ஏற்படுத்​தக்​கூடிய ஓய்வூ​தியத் திட்​டத்​தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்​றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர் ஸ்​டா​லின் தெரி​வித்​தள்​ளார்.

முதல்​வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று தலைமைச் செயல​கத்​தில் முதல்வர் ஸ்டா​லின் தலைமை​யில் காணொலி வாயிலாக நடைபெற்​றது. பேராசிரியர் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்​பிரமணி​யன், எஸ்.நாராயண் மற்றும் நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம், நிதித்​துறை செயலர் உதயச்​சந்​திரன் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர்.

கூட்​டத்​தில் முதல்வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: தமிழக அரசின் அடுத்த பட்ஜெட் வரும் மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்​யப்​படு​கிறது. தமிழகத்​தில் ஒரு கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்​கும், மாதந்​தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறோம்.

அரசுப் பள்ளி​களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவி​களுக்கு புது​மைப்​பெண் திட்​டத்​தின் கீழ், மாதம் ரூ.1,000 வழங்​கு​வ​தால் இடைநிற்றல் குறைந்து, மாணவி​களின் உயர்​கல்வி சேர்க்கை உயர்ந்​துள்ளது. நான் முதல்​வன் திட்டம் 2.60 லட்சம் மாணவர்​களுக்கு வேலை​வாய்ப்பை பெற்று தந்துள்ளது. 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்​களுக்​கு பயன் அளிக்​கும் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம், மாணவர்​களின் வருகை​யை​யும், ஊட்டச்​சத்து நிலை​யை​யும், கற்றல் திறனை​யும் மேம்​படுத்​தி​யிருக்​கிறது.

இப்படி பல்வேறு சமூகநலத் திட்​டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளை​யில், தமிழகத்​தின் பொருளாதார வளர்ச்​சி​யை​யும் வேகப்​படுத்தி, 2030-ம் ஆண்டுக்​குள் ஒரு டிரில்​லியன் டாலர் பொருளா​தாரம் என்ற இலக்கை அடைய வேண்​டும் என்று முனைப்புடன் செயல்​பட்டு வருகிறோம். கடந்த 4 ஆண்டு​களில் சுமார் 40 லட்சம் பேர் வேலை​வாய்ப்பு பெற்றுள்​ளனர்.

பல ஆண்டு காலமாக, தமிழகத்​தில் சிறந்து விளங்​கும் மோட்​டார் வாகன உற்பத்தி, ஜவுளிஉற்பத்தி, தோல்​பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகள் மட்டுமல்​லாமல், தோல் அல்லாதகாலணி உற்பத்தி, புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி துறைப் பொருட்கள் உற்பத்தி,உலகளாவிய திறன்மையங்கள் ஆகியவற்றை புதிய வளர்ச்​சித்துறை​களாக முன்னிறுத்தி, இந்த துறை​களி​லும், இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்​துள்ளோம். நலத்​திட்​டங்​களையும் கட்டமைப்பு மேம்​படுத்​துதலை​யும் ஒரே நேரத்​தில் செய்​வதற்​குத் தேவையான ஆதாரங்களை நடவடிக்கைகளை எடுத்​திருக்​கிறோம்.

மாநில அரசுகளின் நிதி நிலை​யில் பெரும் தாக்​கத்தை ஏற்படுத்​தக்​கூடிய ஓய்வூ​தியத் திட்​டத்​தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்​கும் ​மாற்​றங்​களை​யும் ஆய்வு செய்து வரு​கிறோம். தமிழகத்​தின் ​முன்னேற்​றத்தை அடுத்​தகட்​டத்​துக்கு எடுத்து செல்​வதற்கான உங்​களின் பரிந்​துரைகளை​யும், ஆலோ​சனை​களை​யும் நான் எ​திர் நோக்கி​யுள்​ளேன்​. இவ்​வாறு அவர்​ பேசினார்​.

x