அண்ணாசாலைக்கு நான் தனியாளாக வருகிறேன்: உதயநிதிக்கு எதிர் சவால் விட்ட அண்ணாமலை


சென்னை: அண்ணாசாலையில் எங்கே வரவேண்டுமென இடத்தை குறித்து சொல்லட்டும். நான் தனியாளாக வருகிறேன் என உதயநிதியின் சவாலுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை செனாய்நகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடன், அண்ணாமலை ஒருமையில் பேசியது பற்றி கேள்வி எழுப்பியபோது, ‘அது அவர்களுடைய தரம். பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள்.

இந்த நிதி தொடர்பான பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார்கள்.வால்போஸ்ட் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? வீட்டில் தான் இருப்பேன் வரட்டும். அறிவாலயம் குறித்த எதோ முன்பு சொன்னார். முடிந்தால், தைரியம் இருந்தால் முதலில் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள்” என்றார்.

இந்த நிலையில் சேலத்தில் இதுகுறித்து பதிலளித்த அண்ணாமலை, “இன்று சேலத்தில் உள்ளேன். பின்னர் காசி தமிழ் சங்கமம், கும்பமேளாவுக்கு செல்கிறேன். பிறகு அமித்ஷா கோவை வருகிறார். அதன்பின்னர் அடுத்தவாரம் சென்னை வருவேன்.

அப்போது அண்ணாசாலையில் எங்கே வரவேண்டும் என திமுக காரர் இடத்தை குறிக்கட்டும். அங்கே தனியாளாக நான் அங்கே வருகிறேன். மொத்த திமுக படையையும் நீங்கள் அங்கே குவியுங்கள். தடுத்து நிறுத்திப் பார். நான் பேசியதில் இருந்து பின்வாங்க போவதில்லை”எனத் தெரிவித்தார்.

x