அதிமுகவை ஒன்றிணைக்க சிலர் தடையாக உள்ளனர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


சென்னை: ஒற்றை தலைமை​யின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் தெரி​வித்​துள்ளார்.

அதிமுக தொண்​டர்கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மாநில தலைமை நிர்​வாகிகள் மற்றும் மாவட்ட செயலா​ளர்கள் ஆலோசனைக் கூட்​டம், முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்​சந்​திரன் ஆகியோர் தலைமை​யில் சென்னை எழும்​பூரில் நேற்று நடைபெற்​றது. இதில் நிர்​வாகிகள் பலர் பங்கேற்று, அதிமுக இணைப்பு அவசியம் என வலியுறுத்​தினர்.

பின்னர் ஓ.பன்னீர்​செல்வம் பேசி​ய​தாவது: அதிமுக​வில் ரத்து செய்ய முடியாத விதியை ரத்து செய்திருக்​கிறார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம், உரிய முடி​வெடுக்​கும். 3 ஆண்டுகளாககட்சியை ஒன்றிணைக்க போராடி வருகிறேன். அனைவரும் ஒன்றிணை​யும் காலம் வெகுதூரத்​தில் இல்லை. வரும் காலம் தேர்தல் காலம். சில ரகசி​யங்கள் இருக்​கின்றன. அதன்படி செயல்​பட்டு, 2026-ல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைப்​போம்.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் ஓபிஎஸ் கூறும்​போது, “அனை​வரும் ஒன்றிணைந்​தால்​தான் 2026 தேர்​தலில் வெற்றி பெற முடி​யும் என தொண்​டர்​களும், மக்களும் நினைக்​கின்​றனர். ஒருமித்த கருத்​தோடு இணைய வேண்​டும். அதற்கு சிலர் தடையாக இருக்​கின்​றனர். கட்சிக்கு ஒற்றைத் தலைமை​தான் வேண்​டும் என்றனர். ஆனால், ஒற்றைத் தலைமைக்கு வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாகத்​தான் அதிமுக உள்ளது” என்றார்.

x