வேடசந்தூர் அருகே நிலா பெண்ணாக சிறுமி தேர்வு: மகளிர் மட்டும் பங்கேற்கும் பாரம்பரிய வழிபாடு


வேடசந்​தூர்: ஆண்டு​தோறும் தை மாதம் பவுர்​ணமியன்று ஒரு சிறுமியை நிலாப் பெண்ணாக தேர்வு செய்து, இரவு முழு​வதும் பெண்கள் மட்டுமே பங்கேற்​கும் பாரம்​பரியத் திரு​விழா, திண்​டுக்கல் அருகே​யுள்ள கோட்​டூர் கிராமத்​தில் நேற்று இரவு நடைபெற்​றது.

திண்​டுக்கல் மாவட்டம் வேடசந்​தூர் அருகே​யுள்ள கோட்​டூர் கிராமத்​தில் ஒவ்வோர் ஆண்டும் தை பவுர்ணமி நாளன்று இரவில் நிலாப்​பெண் வழிபாடு நடை
பெறுவது வழக்​கம். தை மாத பவுர்​ணமிக்கு ஒரு வாரத்​துக்கு முன்பாக கிராமத்​தில் வசிக்​கும் ஒவ்வொரு குடும்பத்​தில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதி, குலுக்கல் முறை​யில் ஒரு சிறுமி நிலாப்​பெண்ணாக தேர்வு செய்​யப்​படு​வார்.

இவ்வாறு தேர்வு செய்​யப்​பட்ட சிறுமிக்கு கிராம மக்கள் தங்கள் வீடு​களில் இருந்து பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து வழங்​கு​வர். இந்த ஆண்டு நிலாப் பெண்ணாக கோட்​டூர் அருகே​யுள்ள தலையூத்​துப்​பட்​டியைச் சேர்ந்த ஆனந்​தன் - தமிழ்​செல்வி தம்ப​தி​யின் மகள் தீக் ஷா(13) தேர்வு செய்​யப்​பட்​டார். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தை மாதம் பவுர்ணமி நாளான நேற்று முன்​தினம் இரவு அச்சிறுமிக்கு புத்​தாடை அணிவித்து, ஆவாரம்பூ மாலை​யிட்டு அலங்​கரித்து, தலையில் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையை சுமக்கச் செய்து, ஊருக்கு வெளியே உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்​றனர். அங்கு சிறுமியை அமர வைத்து, இரவு முழு​வதும் கும்​மியடித்து நிலா பாடல்கள் பாடி, வழிபாடு நடத்​தினர்.

விவசாயம் செழிக்கும்... விடிவதற்கு முன் கோயில் வளாகத்​தில் பெண்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்​தனர். தொடர்ந்து அதிகாலை​யில் சிறுமியை அழைத்​துச்​சென்று, அருகே​யுள்ள நீர்​நிலை​யில் தீபம் ஏற்றச்​செய்து வழிபட்​டனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்​போது, “இந்த வழிபாடு தொன்​று​தொட்டு நடந்து வருகிறது. முன்னோர் அறிவுறுத்​தி​யபடி, பெண்கள் மட்டுமே பங்கேற்​கும் பாரம்​பரிய வழிபாட்டு முறையைத் தொடர்​கிறோம். இதனால் விவசாயம் செழிக்​கும் என்பது ஐதீகம்” என்றனர்.

x