ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்டகூட்டமைப்பு சார்பில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. முன்னாள் அமைச்சரும், கோபி அதிமுக எம்எல்ஏவுமான கே.செங்கோட்டையன் இந்த விழாவைப் புறக்கணித்தார்.
இந்நிலையில், கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்ட வீட்டுக்கு நேற்று இரவு காவல் ஆய்வாளர் மற்றும் 3 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிமுகவினரிடையே விசாரித்தபோது, “தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் போலீஸாரிடம் கோரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், அவர்களாகவே செங்கோட்டையன் வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.