இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர் 14 பேர் கைது


கோப்புப் படம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் நேற்று மாலை இந்திய கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைந்து, 5 நாட்டுப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து, 14 பேரும் நாகைதுறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அந்த மீனவர்களுக்குச் சொந்தமான 5 நாட்டுப் படகுகளையும் பறிமுதல்செய்துள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில்இலங்கை மீனவர்கள், இந்தியகடல் எல்லைக்குள் மீன்பிடித்தது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.