திருப்பூர்: ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் .
திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் சென்ற தனியார் பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இப்பேருந்து ஊத்துக்குளி அருகே கவுண்டம் பாளையம் பகுதியில் இன்று காலை 8.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஒரு கண்டெய்னர் லாரியை முந்த முயற்சி செய்த நிலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.