செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: ஏரியை திறப்பது குறித்து ஆலோசனை


காஞ்சிபுரம்: சென்னை​யின் குடிநீர் ஆதாரமாக விளங்​கும் செம்​பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப் படி ஏரியின் நீர் மட்டம் 21.90 அடியாக உயர்ந்​தது. ஏரியின் மொத்த கொள்ளவு 24 அடி. தற்போது ஏரியில் 2,903 மில்​லியன்கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 5,440 கன அடி நீர் வந்து கொண்​டுள்​ளது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

இன்றும், கனமழை பொழி​யும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் விரை​வில் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டிய உடன் அணையின் பாது​காப்பு கருதி உபரி நீர் திறப்பது வழக்கம். இதனால் நீர்​வளத் துறை அதிகாரிகள் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டிய உடன் செம்​பரம்​பாக்கம் ஏரியை திறப்பது குறித்து அலோசனை நடத்தினர்.

இதுகுறித்து நீர்​வளத் துறை அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “ஏரி​யின் நீர் மட்டம் 22 அடியை நெருங்​கும்​போது முறைப்படி அடையாற்றின் கரையோரம் வசிக்​கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை ​விடப்​படும். அதன் பிறகு செம்​பரம்​பாக்​கம் ஏரி ​திறக்​கப்​படும்” என்​றனர்​.

x