தீபாவளியை முன்னிட்டு அக்.27-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்


சென்னை: தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக் கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27-ம் தேதி)முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x