கோவை மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு


கோப்புப் படம்

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று (அக்.22) கனமழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக்டோபர் 23-ம் தேதி) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

x