அக்.24 வரை பயண அட்டைகள் விற்பனை: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்


சென்னை: மாநகரப் பேருந்துகளில் பயன்படுத்தும் வகையிலான பயண அட்டைகளை அக்.24-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர பேருந்துகளில் அக்.16 முதல் நவ.15-ம் தேதி வரையில் செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக் கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை (TAYPT) மாதந்தோறும் 7 முதல் 22-ம் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை (MST) மாதந்தோறும் 1 முதல் 22-ம் தேதி வரையிலும், அக்.11 முதல் நவ.10-ம் தேதி வரை செல்லத்தக்க 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை (SCT) மாதந்தோறும் 1 முதல் 13-ம் தேதி வரையிலும் அனைத்து மாநகர போக்குவரத்துக்கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், அக்.11 முதல் 15-ம் தேதி வரை பயணச்சீட்டுகள் விற்பனை செய்யக்கூடிய நாட்களில் ஆயுதபூஜை மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பயண அட்டைகளும் அக்.24-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டது.

x