வனத்துறை சிகிச்சையளித்து வந்த பெண் குட்டி யானை உயிரிழப்பு: முதுமலையில் அதிர்ச்சி


முதுமலை: முதுமலையில் வனத்துறையால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண் குட்டி யானை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பெண் யானைக் குட்டி ஒன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த யானை உடல் நலம் குன்றி இருந்தது. இதையடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக குட்டி யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சையில் இருந்து வந்த அந்த குட்டி யானை இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

முதுமலை கள இயக்குநர் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் துணை இயக்குநர் அறிவுரைப்படி துணை இயக்குநர் முன்னிலையில் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x