நாச்சியார்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்


கும்பகோணம்: நாச்சியார்கோவிலில் அரசு பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சூரியராகவி (16). இவர் நாச்சியார்கோவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தார் சூரியராகவி. அப்போது அந்த வழியா வந்த அரசு பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பின் படிக்கட்டில் ஏறினார். ஆனால், அங்கும் கூட்டமாக இருந்தால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

பேருந்து நாச்சியார்கோவில் திருப்பத்தில் திரும்பும்போது நிலை தடுமாறி சூரிய ராகவி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x