பருவமழை எதிரொலி: பாமக கூட்டங்கள் தள்ளிவைப்பு


சென்னை: பாமக தலைமை அலுவலகம்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசைக் கண்டித்து வரும் 17-ம் தேதிவடலூர், 20-ம் தேதி திண்டிவனம்,26-ம் தேதி சேலம் ஆகிய நரங்களில் பாமக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுஇந்தக் கூட்டங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப்பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

x