சென்னையில் இஸ்கான் சார்பில் மன அழுத்த மேலாண்மை வகுப்பு!


சென்னை: இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்திர வகுப்பு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நாம் பிறந்து விட்டோம் என்பது கடந்த காலம். ஆனால் நாம் ஏன் பிறந்தோம் என்பதை அறிவது நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தும். பகவத் கீதை வாயிலாக இதைப் பற்றிய வாராந்திர வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.

அந்த வகையில், அக்.13-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இந்த வகுப்பு தொடங்கப்படுகிறது. மேற்கு மாம்பலம், சுப்பிரமணியன் தெருவில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த பாடநெறி ஆன்மிகப் பாதையில் உள்ள உங்கள் சந்தேகங்களை தெய்வீக விஞ்ஞானத்தின் உதவியுடன் தீர்த்து வைக்கும். இதனால் நேர்மையாக பயிற்சி செய்பவருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 9840403435 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x