நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 25 மி.மீ. மழை பெய்திருந்தது. பாளையங்கோட்டையில் 4 மி.மீ, நாங்குநேரியில் 3 மி.மீ, பாபநாசத்தில் 2 மி.மீ, மணிமுத்தாறில் 0.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பெய்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

மாலை 4.15 மணிக்கு பள்ளிகள் விடும் நேரத்தில் பெய்த மழையால் மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்புவதில் சிரமப்பட்டனர். பாளையங்கோட்டையில் பள்ளிகள் அமைந்துள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

x