துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு கரூர் எஸ்.பி. பாராட்டு!


கரூர்: தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி தளத்தில் கடந்த செப்.26ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன.

இருபாலருக்கும் நடந்த இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் பிரிவில் 250, பெண்கள் பிரிவில் 200 என 450 பேர் பங்கேற்றனர். மத்திய மண்டலம் சார்பில் ஆண்கள் பிரிவு சார்பில் கரூர் மாவட்டத்திலிருந்து 5 பேர் பங்கேற்றனர். இதில், வெங்கமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் பாலமுருகன் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். கரூர் ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் சிவசக்திகுமார் ரிவால்வர் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று, எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிசுகள் வழங்கிப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

x