கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 30 விமானங்கள் இயக்கம்; 9467 பேர் பயணம்


கோவை: கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) 30 விமானங்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 9,467 பேர் பயணம் செய்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் தினமும் அதிகபட்சமாக 28 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அக்டோபர் மாதத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் கடந்த அக்.6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உள்நாடு மற்றும் வெளிநாடு பிரிவுகள் சேர்த்து மொத்தம் 30 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 9,467 பேர் அன்றைய தினத்தில் மட்டும் பயணம் செய்துள்ளனர்.

அக்டோபர் மாத தொடக்கத்தில் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சிங்கப்பூர் மற்றும் உள்நாட்டு பிரிவில் இம்மாத இறுதிக்குள் மேலும் சேவைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதனால் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை நிலையான வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x