கும்பகோணத்தில் இளைஞர் காங்கிரஸார் எழுச்சி பயண சந்திப்பு!


கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸார் எழுச்சி பயணச் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.என்.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் சசி வரவேற்றார். சட்டமன்றத் தொகுதி தலைவர் என்.விஜய், துணைத் தலைவர்கள் ராஜேஷ், உமாமகேஸ்வரன், ரிச்சர்ட் செபஸ்டீன், மாநில ஊடகப் பிரிவு நிர்வாகி வி.என்.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.லெனின் பிரசாத் கூறியது; தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸை பலப்படுத்துவதற்காக 3-வது கட்டமாகத் தஞ்சாவூரில் 3-ம் தேதி தொடங்கி, இன்று கும்பகோணம், 5-ம் தேதி நாகை, 6-ம் மற்றும் 7-ம் தேதிகளில் கடலூர் மாவட்டங்களில் உள்ள இளைஞர் காங்கிரஸாரை சந்திக்க உள்ளேன்.

பொதுமக்களுக்கு சேவையாற்றவும், இளைஞர் காங்கிரஸாரை ஊக்கப்படுத்தவும் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை சென்ற மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதை உணரமுடிந்தது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாநகர மேயர் க.சரவணன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சகஜானந்தா, மாநகரத் தலைவர் க.மிர்சாவூதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ச.சக்திஈஸ்வர் நன்றி கூறினார்.

x