ஓவியம், சிற்பக் கலையில் சாதனை: 6 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருது


சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக கலை பண்பாட்டு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தை சேர்ந்த மரபுவழி மற்றும் நவீன பாணி கலை வல்லுநர்கள் நுண்கலை துறை யில் செய்துள்ள சாதனைகள், சேவைகளை பாராட்டி, தமிழக கலை பண்பாட்டு துறையின்ஓவிய நுண்கலை குழு வாயிலாக ஆண்டுதோறும் ‘கலைச் செம்மல்’ விருது வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், ஆண்டுக்கு 6 பேருக்கு விருதுடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருதுகளுக்கு கலைஞர் களை தேர்வு செய்யும் வகையில், கலை பண்பாட்டு துறை இயக்குநர் சே.ரா.காந்தி தலைமையில் தேர்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஓவியர்கள் சு.சந்தானகுமார், எம்.சேனாதிபதி, வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, சேஷாத்திரி, விஸ்வம் ஆகியோர் பங்கேற்றனர். இக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மரபுவழி ஓவிய பிரிவில் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்ப பிரிவில் லே.பாலச்சந்தர், கோ.கன்னியப்பன், நவீன பாணி ஓவிய பிரிவில் கே.முரளிதரன், ஏ.செல்வராஜ், நவீன பாணி சிற்ப பிரிவில் ரா.ராகவன் ஆகியோருக்கு கலைச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

x