சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!


சவுக்கு சங்கர்

என் மகள் குறித்தும், என் குடும்பம் பற்றியும் உண்மைக்குப் புறம்பாக ஆதரமற்ற செய்திகளை வெளியிட்ட சவுக்கு சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்தும் சவுக்கு மீடியா என்ற யூடிப்பிலும் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்து வந்தார்.

சவுக்கு சங்கர்

இந்த பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது கடந்த 2022-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் மர்மமாக உயிரிழந்த கடலூர் மாணவியின் தாயார் செல்வி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

சவுக்கு சங்கர் குறித்து புகார் அளித்துள்ள செல்வி

அந்த மனுவில்," சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலில் கடந்த 20.7.2022 அன்று 'கள்ளக்குறிச்சி விவகாரம், மர்மம் அவிழ்க்கும் சவுக்கு' என்ற தலைப்பில் சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனது மகள் குறித்தும், என்னை பற்றியும், குடும்பத்தினர் பற்றியும் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை சவுக்கு சங்கர் தெரிவித்தார். அவர் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார் என்று தெரிந்தபோதும் தகுந்த ஆதாரம் அப்போது என்னிடம் இல்லை.

இந்த நிலையில் சவுக்கு சங்கரிடம் உதவியாளராக இருந்த பிரதீப் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சவுக்கு சங்கர் பணம் பெற்றுதான் இப்படி பேசினார் என்று கூறியுள்ளார்.

சவுக்கு சங்கர்

எனவே, இந்த புகாரை ஆதாரமாக வைத்து சவுக்கு சங்கர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள புகார் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

x