திருவீதிபள்ளத்தில் காவல் நிலையம் அருகே திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சமுதாய கழிப்பறை


திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சமுதாயக் கழிப்பறை.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட திருவீதிபள்ளம் பகுதியில், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்காக காவல் நிலையம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 2021-22-ம் ஆண்டின் தூய்மை இந்தியா திட்டத்தில், ரூ.24.96 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாயக் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையிலும், இந்தக் கழிப்பறை திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே, காவல் நிலையம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களின் வசதிக்காக, புதிய கழிப்பறையை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

x