தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்: ஜி.கே.வாசன்


தஞ்சை: கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாபநாசத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியது: அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிர்களுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உரியத் தண்ணீரை வழங்க மறுக்கிறது. நமக்குரிய தண்ணீரை விரைவாகக் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதே போல், மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார்

x