பாஜகவில் இணைந்த வைகோ மருமகன்... தொடரும் விலகலால் மதிமுகவினர் அதிர்ச்சி!


வைகோ மருமகனை வரவேற்கும் அண்ணாமலை

மதிமுகவில் இருந்து வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி மற்றும் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

புதுக்கோட்டை செல்வத்த்துக்கு அண்ணாமலை வரவேற்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை பாஜகவுக்கு கொண்டு வரும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பலரும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது அதிகரித்துள்ளது.

அந்த வகையில், வைகோவின் மருமகன் முறை உறவினரான கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

வைகோ

மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த புதுக்கோட்டை செல்வம் அண்மையில் கட்சியில் இருந்து விலகியிருந்தார். இதனையடுத்து தற்போது அவர் வைகோவின் மருமகனையும் அழைத்துக்கொண்டு போய் பாஜகவில் இணைந்துள்ளார்.

மதிமுகவின் அண்மைக்கால செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், கட்சியில் இருப்பவர்களும் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருப்பதால் மதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x