குஜராத், டெல்லி உயிரிழப்பு சம்பவங்கள்: புதுச்சேரி ஆளுநர் வேதனை


ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் | கோப்புப் படம்

புதுச்சேரி: குஜராத், டெல்லி உயிரழப்புகள் தொடர்பாக புதுச்சேரி மக்கள் சார்பில் துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "குஜராத், ராஜ்கோட் விளையாட்டு திடலில் நேற்று (25.05.2024) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த இரு செய்திகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இரண்டு துயர சம்பவங்களும் மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கின்றன.

இந்த தீ விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு புதுச்சேரி மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கடினமான, துயரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

x