ஓய்வு பெற இருந்த நிலையில் கழுகுமலை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் 


காவல் ஆய்வாளர் விஜயகுமார்.

கோவில்பட்டி: கழுகுமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கழுகுமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது இவர் மீது திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு த்துறை போலீஸார், அவர் லஞ்சம் பெற்றதை உறுதி செய்து நெல்லை சரக டிஐஜியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையே அவர் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு காவல்துறை பிரிவில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விஜயகுமார் கடந்த 2022-ம் ஆண்டு கல்முனை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.

இதையடுத்து கழுகுமலை காவல் ஆய்வாளர் விஜயகுமாரை நேற்று பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் விஜயகுமார் வரும் முப்பதாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x