பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: முதல்வரிடம் மனு அளிக்க முடிவு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செப். 28-ல் நடைபெற உள்ள திமுக பவள விழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் அன்றைய தினம் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலைமுன்பு கூடி, அங்கிருந்து நடைபயணமாக வந்து முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் ப.ரவிச்சந்திரன், செயலர் ஜி.சுப்பிரமணியன் ஒருங்கிணைக்கின்றனர்.

x