சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு


சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த எல்.சி. விக்டோரியா கவுரி,பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

x