பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: தாம்பரம் அருகே நன்மங்கலம், சித்தாலப்பாக்கத்தில் என்ஐஏ ரெய்டு 


நன்மங்கலம் பாண்டியன் நகரில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் வீடு

தாம்பரம்: பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சித்தாலப்பாக்கம், நன்மங்கலம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிஸ்பு-உத்-தஹீர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் இன்று (செப்.24) காலை முதல், தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம், நன்மங்கலம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்மங்கலம் பாண்டியன் நகரில் வசித்து வரும் ரமேஷ் அகமது (28) என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல் சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர், லோட்டஸ் காலனியில் வசிக்கும் முகமது யாசின் என்பவர் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீர் என்ற அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு மற்றும் இந்த அமைப்புக்கு உறுதுணையாக இயங்குவதாக வந்த தகவலில் அடிப்பரையில் அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

x